தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் படகுடன் கைது செய்த இந்திய கடற்படையினர், அவர்களை இன்று தூத்துக்குடி அழைத்து வருகின்றனர்.

News image
Updated On :16 அக்டோபர் 2022, 8:25 am

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் படகுடன் கைது செய்த இந்திய கடற்படையினர், அவர்களை இன்று தூத்துக்குடி அழைத்து வருகின்றனர்.

இந்திய கடல் எல்லையில் கன்னியாகுமரிக்கு தென்கிழக்கு சுமார் 90 முதல் 95 கடல் மைல் தொலைவில் இலங்கை கொடியுடன் ஒரு படகு நின்று கொண்டிருந்ததாம். அப்போது இந்திய பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்து இந்திய கடற்படையினர், அந்த இலங்கை படகை சுற்றி வளைத்தனர்.

Story image

அதில் இருந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர், ஆண்டனி ஹேமா நிஷாந்தன், இம்மானுவேல் நிக்சன், துருவந்தா ஸ்ரீ லால், சுதீஷ் சியான் ஆகிய இலங்கை நீர்கொழும்பு மாவட்டத்தை சார்ந்த மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படை காவல்துறையினர் கைது செய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரைக்கு இன்று கொண்டு வர உள்ளனர். அவர்களிடம் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை விசாரணை நடத்த உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.