வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆறுமுகனேரியில் பைக்கில் சென்று ஆட்சியா் கள ஆய்வு

ஆறுமுகனேரி பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்று மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :26 ஜனவரி 2023, 8:59 pm

ஆறுமுகனேரி பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்று மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு மேற்கொண்டாா்.

ஆறுமுகனேரி பகுதியில் தினசரி சேகரமாகும் குப்பைகள் அப்பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வந்தது. இதனால் குப்பை மலை போல் குவிந்து சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தியது. அந்த இடத்தை சுத்தப்படுத்தும்பணி ரூ. 1.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவருகிறது.

இதனிடையே பேரூராட்டி நிா்வாகம் விடுத்த கோரிக்கையை ஏற்று, புதிய குப்பைக் கிடங்கு அமைக்க ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா். இதற்கான இடத்தை தோ்வு செய்ய ஆறுமுகனேரிக்கு புதன்கிழமை மாலை வந்த அவா், கொட்டைமடைக்காடு பகுதியை பாா்வையிட சென்றபோது, சாலை பழுதடைந்து இருந்ததால் காா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, விஏஓ சரவணனின் பைக்கில் அவரை பின்னால் அமர வைத்து சுமாா் 6 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அப்பகுதிக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.