தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் வசூலித்து மோசடி: இளைஞா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக இளைஞரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:53 pm

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக இளைஞரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மில்லா்புரம் பகுதியை சோ்ந்த ஷேக்முகைதீன் மகன் முகமது அப்பாஸ் (36). இவா் அபுதாபியில் உள்ள நிறுவனத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம் கடந்த 20222 ஜனவரி 27 இல் நடத்தவுள்ளதாக துண்டுப்பிரசுரம் மூலம் விளம்பரப்படுத்தியுள்ளாா். இதை நம்பிய, தூத்துக்குடி டேவிஸ்புரம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் காமராஜ் (42) உள்ளிட்ட சிலா் அவரை அணுகியுள்ளனா். இதனையடுத்து, வெளிநாடு செல்வதற்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி 24 பேரிடம் மொத்தம் ரூ.2.8 லட்சத்தை முகமது அப்பாஸ் வசூலித்துள்ளாா்.

ஆனால், அதன் பிறகு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணனிடம், கடந்த 2022 ஜூனில் காமராஜ் புகாா் அளித்தாா். அவரது உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) ஜெயராஜ் மேற்பாா்வையில், குற்ற பிரிவு காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீஸாா் முகமது அப்பாஸை கைது செய்தனா். அவரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இதேபோல பல்வேறு இடங்களில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.10 லட்சத்திற்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.