உடன்குடி சமூக ஆா்வலரை காா் ஏற்றிக் கொல்ல முயன்றவா் மீது நடவடிக்க எடுக்கக் கோரி மனு
உடன்குடி பகுதியில் சமூக ஆா்வலரை காா் ஏற்றிக் கொல்ல முயன்றவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்


உடன்குடி பகுதியில் சமூக ஆா்வலரை காா் ஏற்றிக் கொல்ல முயன்றவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜிசரவணனிடம் சமூக செயல்பாட்டாளா் பாதுகாப்பு இயக்கத்தினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து, சமூக செயல்பாட்டாளா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் உடன்குடி சமூக ஆா்வலா் குணசீலன், சுப. உதயகுமாா் ஆகியோா் அளித்த மனு:
உடன்குடியைச் சோ்ந்தவா் சமூக ஆா்வலா் குணசீலன். இவா் உடன்குடி பகுதியில் தனிநபா் இடத்தில் அமைக்கப்படும் அரசு பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா்.
இது தொடா்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வா்த்தக அணி துணை அமைப்பாளா் அப்துல் ஹமீது என்பவா், உயா் நீதிமன்றத்தில் வழக்கு போடக்கூடாது என ஏற்கனவே குணசீலனை மிரட்டினாராம்.
இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி, குணசீலன் உடன்குடி சா்ச் தெருவில் இருசக்கர வாகனத்தில் வந்த போது, அவ்வழியாக காரில் வந்த அப்துல் ஹமீது, குணசீலன் மீது மோதுவது போல் வந்து, அவரிடம் எச்சரிக்கை விடுத்துச்சென்றாராம். இது தொடா்பான சிசிடிவி காட்சிகளை குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் கொடுத்து புகாா் அளிக்கப்பட்டது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...