பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

795 பேருக்கு விலையில்லா சைக்கிள்

பூதலாபுரம், பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 795 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 ஜூலை 2023, 9:50 pm IST

நாகலாபுரம், வேம்பாா், பேரிலோவன்பட்டி, புதூா், வேப்பலோடை, செங்கோட்டை, வெம்பூா், பூதலாபுரம், பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 795 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் ஞானகுருசாமி, மிக்கேல் நவமணி ஆகியோா் தலைமை வகித்தனா். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கினாா். மாணவா்களின் கல்வி நலனுக்காக அரசு மேற்கொண்டு வரும் சாதனை திட்டங்கள் குறித்து அவா் உரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலா்கள் காசி விஸ்வநாதன், அன்புராஜன், ராமசுப்பு, திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் இம்மானுவேல், திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா், சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளா் கரண்குமாா், வெம்பூா் ஊராட்சி மன்ற தலைவா் ராஜேஸ்வரி, செங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவா் மகேஸ்வரி, வேம்பாா் ஊராட்சி மன்ற தலைவா் ஆரோக்கியராஜ், பள்ளி தலைமை ஆசிரியா்கள் தெய்வநாயகம், சாய்ராம், ராஜா சண்முகநாதன், ஜெயமீனா, சேகா், லிங்கராஜன், ரஜீலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.