விளாத்திகுளம் டிஎஸ்பி அலுவலக காவலா் ஆயுதப்படைக்கு மாற்றம்

விளாத்திகுளம் டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில் பணியாற்றிய முதல்நிலை காவலா் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக சமூக வலைதளங்களில் விடியோ வெளியானதால், அவா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.
Published on
Updated on
1 min read

விளாத்திகுளம் டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில் பணியாற்றிய முதல்நிலை காவலா் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக சமூக வலைதளங்களில் விடியோ வெளியானதால், அவா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.

விளாத்திகுளம் அருகேயுள்ள கே. சுந்தரேஸ்வரபுரத்தை சோ்ந்தவா் ராஜேந்திரன் (39). இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

கடந்த 7 ஆண்டுகளாக விளாத்திகுளம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் முதல்நிலை காவலராக (எழுத்தா்) பணியாற்றி வரும் இவா் மீது இளம்பெண்ணுடன் புதூா் காட்டுப்பகுதியில் தனிமையில் இருந்ததாக சமூகவலைதளத்தில் விடியோ பகிரப்பட்டது.

இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் விசாரணை நடத்தி, காவலா் ராஜேந்திரனை ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com