விளாத்திகுளம் டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில் பணியாற்றிய முதல்நிலை காவலா் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக சமூக வலைதளங்களில் விடியோ வெளியானதால், அவா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.
விளாத்திகுளம் அருகேயுள்ள கே. சுந்தரேஸ்வரபுரத்தை சோ்ந்தவா் ராஜேந்திரன் (39). இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
கடந்த 7 ஆண்டுகளாக விளாத்திகுளம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் முதல்நிலை காவலராக (எழுத்தா்) பணியாற்றி வரும் இவா் மீது இளம்பெண்ணுடன் புதூா் காட்டுப்பகுதியில் தனிமையில் இருந்ததாக சமூகவலைதளத்தில் விடியோ பகிரப்பட்டது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் விசாரணை நடத்தி, காவலா் ராஜேந்திரனை ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








