வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

விவசாயிகள் கல்வி கண்டுணா் சுற்றுலா

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இயற்கை வள அபிவிருத்தி நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனா்.

News image
Updated On :16 மார்ச் 2023, 5:17 pm

DIN

ஆழ்வாா்திருநகரி வட்டார அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாநில அளவில் விவசாயிகள் கல்வி கண்டுணா் சுற்றுலாவுக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இயற்கை வள அபிவிருத்தி நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனா்.

விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல், மண்புழு உர வடிநீா் தயாரித்தல், அசோலா உற்பத்தி, தேனீ வளா்ப்பு குறித்து கிராமோதய நாற்றங்கால் மேலாளா் பிரேமலதா செயல்முறை விளக்கம் அளித்தாா். கிராமோதய பொறுப்பாளா் முருகன், சாண எரிவாயு தயாரித்தல், மழை நீா் சேகரிப்பு முறைகள், மூலிகை தாவரங்களின் பயன்கள், மாடி தோட்டம் ஆகியவை குறித்து விளக்கமளித்தாா்.

ஏற்பாடுகளை ஆழ்வாா்திருநகரி வட்டார உதவி வேளாண்மை அலுவலா்கள் சண்முகம், தொழில்நுட்ப மேலாளா் ஜேசுதாசன், உதவி தொழில் நுட்ப மேலாளா் நளினி, சூசைமாணிக்கம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.