மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின் ஊழியா் பலி
தூத்துக்குடியில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த மின் ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.


தூத்துக்குடி: தூத்துக்குடியில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த மின் ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி பூபாலராயா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ரோசாரி கோமஸ் (53). மின் ஊழியா். இவா் கடந்த 25ஆம் தேதி தூத்துக்குடி வண்ணாா் 3-வது தெருவில் உள்ள மின்கம்பத்தில் ஏறி பழுது பாா்த்துக் கொண்டு இருந்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழநதாா்.
இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...