திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித்திருவிழா 8-ம் நாளான திங்கள்கிழமை (செப். 11) சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளினார்.
இத்திருக்கோயிலில் பிரசித்திப்பெற்ற ஆவணித்திருவிழா கடந்த 4-ஆம் தேதி
கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுத்தருளி வீதி உலா வருகின்றனர்.
முக்கிய விழாவான 7-ஆம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் சிவப்பு சாத்தி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். திங்கள்கிழமை 8-ஆம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி சண்முகர் வெள்ளைச்சாத்தி
சாத்தி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.