புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

திருச்செந்தூரில் சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி வீதி உலா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளினார்.

News image
Updated On :11 செப்டம்பர் 2023, 3:48 am

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித்திருவிழா 8-ம் நாளான திங்கள்கிழமை (செப். 11) சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளினார்.

இத்திருக்கோயிலில் பிரசித்திப்பெற்ற ஆவணித்திருவிழா கடந்த 4-ஆம் தேதி
கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுத்தருளி வீதி உலா வருகின்றனர்.

முக்கிய விழாவான 7-ஆம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் சிவப்பு சாத்தி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். திங்கள்கிழமை 8-ஆம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி சண்முகர் வெள்ளைச்சாத்தி

சாத்தி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.