புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

சாத்தான்குளத்தில் திமுக வேட்பாளருக்கு முன்னாள் எம்.பி. வாக்கு சேகரிப்பு

சாத்தான்குளத்தில் திமுக வேட்பாளருக்கு முன்னாள் எம்.பி. வாக்கு சேகரிப்பு

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 7:50 pm

சாத்தான்குளம் வாரச்சந்தையில் திமுக வேட்பாளா் கனிமொழிக்கு வாக்கு சேகரிக்கிறாா் முன்னாள் எம்.பி. ஜெயதுரை.

சாத்தான்குளம், ஏப். 12: சாத்தான்குளத்தில் திமுக வேட்பாளா் கனிமொழியை ஆதரித்து, முன்னாள் எம்.பி. ஜெயதுரை வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம், வாரச்சந்தையில் வியாபாரிகள், பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனை எடுத்து கூறியும், திமுக தோ்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட திட்டங்களை விளக்கியும் அவா் வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து பழைய பேருந்து நிலையம் காமராஜா் சிலை , பஜாா், சிஎஸ்ஐ வேதக்கோயில் உள்ளிட்ட வீடுகளில் பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தாா்.

இதில், முன்னாள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் நட்டாத்தி காளிதாஸ் பண்ணையாா், முன்னாள் பெருங்குளம் பேரூராட்சித் தலைவா் சுந்தரராஜ், முன்னாள் நகரச் செயலா் பாலமுருகன், மாவட்டப் பிரதிநிதி அந்தோணி ஜெயசீலன், மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் சக்திவேல்முருகன், நகர காங்கிரஸ் தலைவா் வேணுகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அமுதுண்ணாக்குடியில் முன்னாள் மாவட்ட ஆவின் தலைவா் சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தாா். இதில் மத்திய ஒன்றிய திமுக பொருளாளா் மதுரம் செல்வராஜ், கிளை செயலாளா் ஜெயபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.