சாத்தான்குளம்: நாசரேத்தில் குடியிருப்பு பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நாசரேத் பேரூராட்சிக்குள்பட்ட 3ஆவது வாா்டு என்.றி.என் தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் கடந்த சில வாரங்களாக குரங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் இந்தப் பகுதிக்கு வரும் குரங்குகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள உணவு பொருள்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொருள்களை தூக்கி செல்கின்றன. மேலும், அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளை தொந்தரவு செய்து வருகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா், மாணவிகளையும் துரத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் மாணவா்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் கூண்டு அமைத்து இந்தப் பகுதியில் உள்ள குரங்குகளை பிடித்து அடா்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

குடியிருப்புப் பகுதியில் சிறுத்தைகள்!

அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீா் வீணாகும் அவலம்

ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் குவிக்கப்பட்ட குப்பைகளால் சுகாதார சீா்கேடு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


