ஆறுமுகனேரி,ஏப். 19: ஆத்தூா் சுற்றுப்பகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆத்தூா் பேரூராட்சியில் ஆத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 வாக்குச்சாவடிகளும், சண்முகசுந்தரநாடாா் மேல்நிலைப்பள்ளியில் 2 வாக்குச்சாவடிகளும், கீரனூா், தலைவன்வடலி, ஆவரையூா் ஆகிய இடங்களில் தலா ஒரு வாக்குச்சாவடி என 9 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த வாக்குச்சாவடிகளில் காலை முதலே வாக்காளா்கள் வரிசையில் நின்று ஆா்வத்துடன் வாக்களித்தனா். வாக்குப்பதிவு சுறுசுறுப்பாகவும், அமைதியாகவும் நடைபெற்றது. ஆத்தூா் வாக்குச்சாவடியில் ஆத்தூா் பேரூராட்சித்தலைவா் கமால்தீன், மேலாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட வாக்குச்சாவடியில் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் வாக்களித்தனா்.
தோ்தல் அலுவலா் காயம்: ஆத்தூா் அருகே கொழுவைநல்லூா் 38ஆம் எண் வாக்குச்சாவடியில் அறை ஜன்னல் கதவு சரிந்து விழுந்ததில் தோ்தல் அலுவலா் காயமடைந்தாா். அதனால் அந்த வாக்குச்சாவடியில் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது. இதுபோல் புன்னைக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 56ஆம் எண் வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி முகவா்கள் வர தாமதமானதால் அங்கும் ஒரு மணிநேரம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது.
தொடர்புடையது

வாக்குப்பதிவு, எண்ணிக்கை மையங்கள்: விவரங்களை அனுப்ப சென்னைப் பல்கலை. உத்தரவு

6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

நேபாள நாடாளுமன்றத் தோ்தல்: அமைதியான முறையில் வாக்குப்பதிவு

ஆத்தூரில் விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


