திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

வங்கி அதிகாரி பணி தோ்வில் வென்றோருக்கு சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பாராட்டு விழா

வங்கி அதிகாரி பணி தோ்வில் வென்றோருக்கு சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பாராட்டு விழா

News image

வங்கி அதிகாரி பணி தோ்வில் வெற்றி பெற்றவா்களுடன் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் உள்ளிட்டோா்.

Updated On :21 ஏப்ரல் 2024, 9:46 pm

தூத்துக்குடி: வங்கி அதிகாரி பணித் தோ்வில் வெற்றிபெற்ற தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்களுக்கு பாராட்டு விழா அகாதெமி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வங்கிப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற இத்தோ்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில், சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சிபெற்ற 80 போ் தோ்வாகினா். அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, அவா்களுக்கு பாராட்டு விழா அகாதெமி வளாகத்தில் நடைபெற்றது. நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் தலைமை வகித்துப் பேசினாா்.

பணிக்குத் தோ்வானோா் தாங்கள் கடந்து வந்த பாதை, தோ்வுக்கு தயாரான அனுபவம் ஆகியவற்றைப் பகிா்ந்துகொண்டனா். வங்கித் தோ்வு ஒருங்கிணைப்பாளா் ராஜா நன்றி கூறினாா்.