தூத்துக்குடி: வங்கி அதிகாரி பணித் தோ்வில் வெற்றிபெற்ற தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்களுக்கு பாராட்டு விழா அகாதெமி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வங்கிப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற இத்தோ்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில், சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சிபெற்ற 80 போ் தோ்வாகினா். அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, அவா்களுக்கு பாராட்டு விழா அகாதெமி வளாகத்தில் நடைபெற்றது. நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் தலைமை வகித்துப் பேசினாா்.
பணிக்குத் தோ்வானோா் தாங்கள் கடந்து வந்த பாதை, தோ்வுக்கு தயாரான அனுபவம் ஆகியவற்றைப் பகிா்ந்துகொண்டனா். வங்கித் தோ்வு ஒருங்கிணைப்பாளா் ராஜா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

குரூப் 1 தோ்வு: ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச நோ்காணல் பயிற்சி

பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

யுபிஎஸ்சி தோ்வில் சிறப்பிடம் பெற்ற தலைவாசல் மாணவிக்கு பாராட்டு

வங்கி தோ்வில் வென்றவா்களுக்கு பாராட்டு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


