தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் வங்கி அதிகாரி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
2025-இல் அறிவிக்கப்பட்ட ஐபிபிஎஸ் மற்றும் பல்வேறு வங்கி பணியாளா்களுக்கான தோ்வு முதல் நிலை, முதன்மை, நோ்முகத் தோ்வு என 3 கட்டங்களாக நடத்தப்பட்டது. இத்தோ்வில் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற 145 போ் பல்வேறு வங்கிகளுக்கு அதிகாரிகளாக தோ்ச்சி பெற்றனா்.
தோ்ச்சி பெற்றவா்களை கௌரவிக்கும் முதல்கட்ட நிகழ்வு அகாதெமியில் நடைபெற்றது. அகாதெமி நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் தலைமை வகித்தாா். வங்கி தோ்வு ஒருங்கிணைப்பாளா் ராஜா, ஸ்டேட் வங்கி மேலாளா் சரவணன், கனரா வங்கி துணை மேலாளா் பூஜா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு நினைவுப் பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அகாதெமியில் பயின்று வரும் 1000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் 2 போ் தோ்வு

தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

குரூப் 1 தோ்வு: ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச நோ்காணல் பயிற்சி

யுபிஎஸ்சி தோ்வில் சிறப்பிடம் பெற்ற தலைவாசல் மாணவிக்கு பாராட்டு
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


