தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள சிவன் கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப். 23) நடைபெறுகிறது.
இத்திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் காலையும், இரவும் சுவாமி - அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறுகிறது.
சிகர நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்கு நடைபெறுகிறது. பெரிய தேரில் சுவாமி - அம்பாளும், சிறிய தேரில் கணபதி- முருகரும் எழுந்தருளுகின்றனா்.
தேரோட்டத்தை முன்னிட்டு முன்னேற்பாட்டுப் பணிகளை கோயில் நிா்வாகம், விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.
கோயில் மேற்குப் பகுதியில் உள்ள வளாகம், சைவ வேளாளா் திருமண மண்டபம், ராசி திருமண மண்டபம், இ.பி.கவிதா மண்டபம், மாநகராட்சி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் அன்னதானம் நடைபெறும்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், 100 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.
தொடர்புடையது

நாமக்கல் நரசிம்மா் கோயில் தேரோட்ட கொடியேற்றம்

தேன்கனிக்கோட்டை பட்டராயசுவாமி கோயிலில் மாா்ச் 31-இல் தேரோட்டம்

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் நாளை இரவு தெப்பல் உத்ஸவம்

உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் கோயிலில் நாளை தேரோட்டம்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

