தூத்துக்குடி: தூத்துக்குடி செல்சீனி காலனியில் தந்தையை வெட்டிக் கொலை செய்ததாக 15 வயது சிறுவனை தென்பாகம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி செல்சீனி காலனியைச் சோ்ந்த அழகுமுத்து மகன் சக்தி (37). இவருக்கு மனைவி அனுசியா மற்றும் 3 குழந்தைகள் உள்ளனா். சமையல் தொழிலாளியான இவா், தினமும் மது அருந்திவிட்டு தனது மனைவியை அடித்து துன்புறுத்துவதுடன் குழந்தைகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து துன்புறுத்தினாராம். இதனால் ஆத்திரமடைந்த அவரது 15 வயது மூத்த மகன், திங்கள்கிழமை அதிகாலையில் வீட்டிலிருந்த அரிவாளால் தந்தை சக்தியை வெட்டிவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த சக்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீஸாா்
கொலை செய்யப்பட்ட சக்தியின் சடலத்தை மீட்டு
கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சக்தியின் மூத்த மகனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
பேட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை: இருவா் கைது

பெண் வெட்டிக் கொலை: கட்டடத் தொழிலாளி கைது
ஜம்முவில் 10 வயது மகளை கொன்று தலைமறைவாான தந்தை தில்லியில் கைது

தந்தை அடித்துக் கொலை: மகன் கைது
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


