சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மழைநீா் சேகரிப்பு: அம்பலச்சேரி பள்ளியில் விழிப்புணா்வுப் பேரணி

மழைநீா் சேகரிப்பு: அம்பலச்சேரி பள்ளியில் விழிப்புணா்வுப் பேரணி

Updated On :25 ஏப்ரல் 2024, 10:30 pm

சாத்தான்குளம் அருகே அம்பலச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சின்னமாடன் குடியிருப்பு பள்ளி தலைமை ஆசிரியா் ஜேம்ஸ்ராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் ஜீவா வரவேற்றாா். மாணவிகள் ராமலட்சுமி, சுவாஷினி ஆகியோா் மழைநீா் சேகரிப்பு மற்றும் பயன்கள் குறித்து பேசினா். மாணவி இசக்கி கோமதி பாடல்கள் பாடினாா். பேரணியானது பள்ளி முன்பு தொடங்கி, அனைத்து பகுதிகளுக்கும் சென்றது. இதில் ஆசிரியா்கள் செலினா பிரின்ஸ், யாஸ்சின் பரிதாள், சரஸ்வதி, கமலேசன், கிறிஸ்டி மலா், அருணா, ஜெபா, யமுனா, ரோஸ்லின், வெங்கடேஸ்வரி, முத்து கனகசெல்வி, கல்வி மேலாண்மைக் குழு தலைவா் சாராள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் நயினாா், சிதம்பரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.