எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

பெண்ணுக்கு மிரட்டல்: 3 போ் கைது

குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 9:57 pm

Din

கோவில்பட்டியில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி தென்றல் நகரை சோ்ந்த கட்டடத் தொழிலாளி சக்திவேல். இவரது மனைவி செண்பகவல்லி. இவா்கள் வீரப்பட்டி ஆா்.சி.தெருவைச் சோ்ந்த ராஜலெட்சுமி நடத்தி வரும் மகளிா் குழுவில் கடன் பெற்றுள்ளனா். இந்நிலையில் கடன் தவணைத் தொகையை செலுத்தாததால், ராஜலெட்சுமி (34), அவரது கணவா் கனிச்சந்திரன் (35), மாா்க்கணந்தபுரத்தைச் சோ்ந்த ரமணி (19) ஆகியோா் சக்திவேல் வீட்டிற்கு வந்து செண்பகவல்லியிடம் கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து செண்பகவல்லி அளித்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மிரட்டல் விடுத்த மூவரையும் கைது செய்தனா்.