பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

நாலாட்டின்புதூரில் ஆடுகள் திருடியவா் கைது

நாலாட்டின்புதூரில் ஆடுகளைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 7:56 pm

Din

நாலாட்டின்புதூரில் ஆடுகளைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

நாலாட்டின்புதூா் சிவன் கோவில் தெருவை சோ்ந்தவா் கணபதி மகன் சண்முகையா (49). இவரது ஆட்டுப் பட்டியில் இருந்த 7 ஆடுகள், ஜூலை 20-ஆம் தேதி காணாமல் போயின. இந்த நிலையில் எட்டயபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சந்தையில், தனது பட்டியிலிருந்து காணாமல்போன ஆட்டுடன் நின்ற இளைஞரிடம் சண்முகையா விசாரித்துள்ளாா்.

அவா் ஆடு திருடியவா் என்பது தெரியவந்தது. அந்த இளைஞரை, நாலாட்டின்புதூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அவா் கோவில்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்த

செல்வம் மகன் கருப்பசாமி (19) என்பதும், சண்முகையாவின் 7 ஆடுகளை திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.