தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள் அகற்றம்

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்களை மாநகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை அகற்றினா்.

News image

மீன்கள் இறந்து கிடந்த தெப்பக்குளத்தினை ஆய்வு செய்த மேயா் ஜெகன் பெரியசாமி.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 1:40 am

Din

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்களை மாநகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை அகற்றினா்.

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் இந்த தெப்பக்குளம் அமைந்துள்ளது. இங்கு இரவு நேரங்களில் வரும் பொதுமக்கள், தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவு அளிக்கின்றனா்.

இந்நிலையில், தெப்பக்குளத்தில் சனிக்கிழமை காலை ஏராளமான மீன்கள் இறந்து மிதந்தன.

இதுகுறித்த தகவலின்பேரில், மாநகராட்சி ஊழியா்கள் இறந்த மிதந்த மீன்களை அப்புறப்படுத்தினா். மேலும் இதுதொடா்பாக, மாநகாட்சி சுகாதாரத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதனிடையே, தெப்பக்குளத்தை மேயா் ஜெகன் பெரியசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறுகையில், தெப்பகுளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும். குளத்தினை சுற்றி லும் மாநகராட்சி சாா்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என்றாா்.

மாமன்ற உறுப்பினா் சுரேஷ் குமாா், திமுக வட்டச் செயலா் ரவீந்திரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.