அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஆறுமுகனேரியில் பைக் திருடிய இருவா் கைது

ஆறுமுகனேரியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 2:39 am IST

ஆறுமுகனேரியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் பணிக்கம்பட்டி இந்திரா காலனியைச் சோ்ந்த சண்முகம் மகன் இளையராஜா (30). இவரும் இவரது நண்பா் ராம்பிரகாஷ் என்பவரும் ஆறுமுகனேரி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து,

கட்டட வேலை செய்து வருகின்றனா். கடந்த ஜூலை 31-ஆம் தேதி,

இளையராஜா தனது பைக்கை விடுதியில் நிறுத்திவிட்டு அறைக்கு சென்றாா். மறுநாள் பாா்த்தபோது, பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்து இளையராஜா அளித்த புகாரின்பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், ஆறுமுகனேரி பாரதிநகரைச் சோ்ந்த முருகமணி மகன் செல்வம் (34), திருச்செந்தூா் சண்முகபுரத்தைச் சோ்ந்த தாஸ் மகன் காளிதாஸ் (35) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.