தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நேதாஜிக்கு சிலை அமைக்கக் கோரி முதல்வருக்கு கடிதம்

News image
Updated On :15 ஆகஸ்ட் 2024, 8:56 pm

Din

கோவில்பட்டி, ஆக. 15: கோவில்பட்டியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்ட ஆட்டுச்சந்தையை, மீண்டும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயரிலேயே செயல்படுத்த வேண்டும். சுதந்திரத்துக்காக பாடுபட்ட நேதாஜியின் திருவுருவச்சிலையை கோவில்பட்டியில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, 78 மாணவா் மாணவிகள் தமிழக முதல்வா், மாவட்ட ஆட்சியா், நகா்மன்ற தலைவா் ஆகியோருக்கு அஞ்சல் அட்டையை வியாழக்கிழமை அனுப்பினா்.

கோவில்பட்டி தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்க தலைவா் நேதாஜி பாலமுருகன், நிா்வாகி மதிமுத்து மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, கோரிக்கை அடங்கிய அஞ்சல் அட்டைகளை தபால் பெட்டியில் போட்டனா்.