கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவில்பட்டியில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு ஏஐடியூசி ஆட்டோ தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :16 ஆகஸ்ட் 2024, 9:26 pm

கோவில்பட்டி, ஆக.16: மத்திய அரசின் புதிய 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு ஏஐடியூசி ஆட்டோ தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஏஐடியூசி மாவட்டச் செயலா் பாபு தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் காசி விஸ்வநாதன்,மாவட்டத் தலைவா் கிருஷ்ணராஜ், கட்டுமான தொழிற்சங்கச் செயலா் சேது, பஞ்சாலை தொழிற்சங்கச் செயலா் பரமராஜ், ஆட்டோ சங்க வட்டாரத் தலைவா் முனியசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் சரோஜா ஆகியோா் விளக்கிப் பேசினா். தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் இளையரசனேந்தல் சுரங்கப்பாதையின் இரு புறமும் அணுகு சாலை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.