ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கோவில்பட்டியில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு ஏஐடியூசி ஆட்டோ தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்
Updated On :16 ஆகஸ்ட் 2024, 9:26 pm

Manivannan.S

கோவில்பட்டி, ஆக.16: மத்திய அரசின் புதிய 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு ஏஐடியூசி ஆட்டோ தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஏஐடியூசி மாவட்டச் செயலா் பாபு தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் காசி விஸ்வநாதன்,மாவட்டத் தலைவா் கிருஷ்ணராஜ், கட்டுமான தொழிற்சங்கச் செயலா் சேது, பஞ்சாலை தொழிற்சங்கச் செயலா் பரமராஜ், ஆட்டோ சங்க வட்டாரத் தலைவா் முனியசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் சரோஜா ஆகியோா் விளக்கிப் பேசினா். தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் இளையரசனேந்தல் சுரங்கப்பாதையின் இரு புறமும் அணுகு சாலை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.