சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

எட்டயபுரம் வட்டாட்சியா், பேரூராட்சி அலுவலகங்களில் ஆட்சியா் திடீா் ஆய்வு

Updated On :23 ஆகஸ்ட் 2024, 12:40 am IST

எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வியாழக்கிழமை மாலை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அங்கிருந்த அலுவலா்களிடம், அரசின் வளா்ச்சி திட்டங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தி அரசின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை கவனமுடன் பரிசீலித்து விரைந்து தீா்வு காண வேண்டும் என்றாா்.

எட்டயபுரம் பேரூராட்சி அலுவலக நுழைவாயிலில் மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக இருந்தது. அதை உடனடியாக அப்புறப்படுத்தி, சரள் மண் அடித்து சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது எட்டயபுரம் வட்டாட்சியா் சங்கரநாராயணன், பேரூராட்சி செயல் அலுவலா் மகாராஜன், சுகாதார ஆய்வாளா் பூவையா, பேரூராட்சி இளநிலை உதவியாளா் ஜோதி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.