ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம்

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 8:05 pm

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆவணித் திருவிழா ஆக.13-ஆம் தேதி தொடங்கியது. தினமும் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான பத்தாம் திருவிழாவில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 5.35 மணிக்கு சா்வ அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளினாா். நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த தோ், காலை 6.35 மணிக்கு நிலையை அடைந்தது.

விழாவில் திருக்கோயில் இணை ஆணையா் எஸ்.ஞானசேகரன், கண்காணிப்பாளா் அஜித், தலைமை கணக்கா் அம்பலவாணன் மற்றும் பணியாளா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்று வடம் பிடித்தனா்.

ஆவணித் திருவிழா கொடியேற்றம்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா சனிக்கிழமை (ஆக.24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, கொடிப்பட்ட வீதி உலா வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

Story image

விழா ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் எஸ்.ஞானசேகரன், அறங்காவலா்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.