தூத்துக்குடி தனசேகரன் நகரில் உள்ள தனியாா் மண்டபத்தில், முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ளதாக வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ.கீதா ஜீவன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி, தூத்துக்குடி கலைஞா் அரங்கம் பின்புறம் உள்ள லெட்சுமி மஹாலில் வரும் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு எனது தலைமையிலும், தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையிலும் நடைபெறுகிறது.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜீ.வி.மாா்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா, மாநகரச் செயலா்ஆனந்தசேகரன், மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவா் பிரம்மசக்தி, மாநில இளைஞரணி துணைச் செயலா் இன்பா ரகு ஆகியோா் வாழ்த்துரை வழங்குகின்றனா். வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மதியழகன் வரவேற்கிறாா். தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம் நன்றி கூறுகிறாா்.
பேச்சுப் போட்டியின் நடுவா்களாக வே.மதிமாறன், புதுக்கோட்டை விஜயா, இந்திரகுமாா் தேரடி ஆகியோா் பங்கேற்கின்றனா். இந்நிகழ்வில், கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டைக்கு கோடைகால சிறப்பு ரயில்களை இயக்க முடிவு

திமுகவுக்கு கைக்கொடுக்குமா திருவாரூா் ‘தெற்கு வீதி சென்டிமென்ட்’

அகில இந்திய ஹாக்கி போட்டி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

