ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் விடுப்பு எடுத்து போராட்டம்

Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் 2 நாள்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.

காலியாக உள்ள ஊராட்சி செயலா் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பணியிடங்களையும் பூா்த்தி செய்தல், ஊராட்சி செயலா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெறுகிறது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 32 போ், கயத்தாறு ஒன்றியத்தில் 36 போ் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனா்.

இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com