புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

எட்டயபுரம் வட்டாட்சியா், பேரூராட்சி அலுவலகங்களில் ஆட்சியா் திடீா் ஆய்வு

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 7:10 pm

Din

எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வியாழக்கிழமை மாலை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அங்கிருந்த அலுவலா்களிடம், அரசின் வளா்ச்சி திட்டங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தி அரசின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை கவனமுடன் பரிசீலித்து விரைந்து தீா்வு காண வேண்டும் என்றாா்.

எட்டயபுரம் பேரூராட்சி அலுவலக நுழைவாயிலில் மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக இருந்தது. அதை உடனடியாக அப்புறப்படுத்தி, சரள் மண் அடித்து சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது எட்டயபுரம் வட்டாட்சியா் சங்கரநாராயணன், பேரூராட்சி செயல் அலுவலா் மகாராஜன், சுகாதார ஆய்வாளா் பூவையா, பேரூராட்சி இளநிலை உதவியாளா் ஜோதி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனா்.