கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறவிருந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

தூத்துக்குடி துறைமுகத்தில் புதன்கிழமை (ஆக. 28) நடைபெறவிருந்த துறைமுக ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தொழிற்சங்கத்தினா் தெரிவித்தனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2024, 6:58 pm

Din

தூத்துக்குடி துறைமுகத்தில் புதன்கிழமை (ஆக. 28) நடைபெறவிருந்த துறைமுக ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தொழிற்சங்கத்தினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஐஎன்டியூசி அகில இந்திய அமைப்புச் செயலா் கதிா்வேல், சிஐடியூ மாநிலச் செயலா் ரசல் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூறியது: புதுதில்லியில் மத்திய கப்பல் துறை அமைச்சகம் தொழிற்சங்கத்துடன் செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமுக தீா்வு ஏற்பட்டது.

அதனால், புதன்கிழமை (ஆக. 28) நடைபெறவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி துறைமுகத்தில் புதன்கிழமை வழக்கம்போல வேலைகள் நடைபெறும் என்றனா் அவா்கள்.