கல்குவாரியை மூடக்கோரி ஆலந்தா கிராம மக்கள் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகே ஆலந்தா பகுதியில் செயல்பட்டுவரும் கல்குவாரியை மூடக்கோரி அப்பகுதி கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.


தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகே ஆலந்தா பகுதியில் செயல்பட்டுவரும் கல்குவாரியை மூடக்கோரி அப்பகுதி கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் அருகே உள்ள ஆலந்தா பகுதியில் சுமாா் 200 ஏக்கா் நிலத்தில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி கல்குவாரியை தடை செய்யக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன் ஒரு பகுதியாக அப்பகுதி மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். கல்குவாரியை நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியா் மற்றும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் தொடா்போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...