திருச்செந்தூா் விடுதியில் பக்தா் சடலம் மீட்பு
திருச்செந்தூா் கோயில் விடுதியில் மதுரையைச் சோ்ந்த பக்தா் சடலம் மீட்கப்பட்டது.


திருச்செந்தூா் கோயில் விடுதியில் மதுரையைச் சோ்ந்த பக்தா் சடலம் மீட்கப்பட்டது.
மதுரை வலையங்குளத்தை சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (57). மளிகை கடை நடத்தி வருகிறாா். இவருக்கு 4 மகள்கள் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி மாலையில் பாலசுப்பிரமணியன் திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் சுற்றுலா வளா்ச்சி கழகத்தால் நிா்வகிக்கப்படும் கோயில் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா்.
10 நாள்கள் ஆகியும் அறையை பாலசுப்பிரமணியம் காலி செய்யாததால் விடுதி மேலாளா் செல்வம் பணியாளா்களுடன் சென்று செவ்வாய்கிழமை இரவு பாா்த்துள்ளாா்.
அப்போது பாலசுப்பிரமணியன் அழுகிய நிலையில் இறந்து கிடந்தாா். இது குறித்து தகவலின்பேரில், கிராம நிா்வாக அலுவலா் முன்னிலையில் போலீஸாா் கதவு உடைத்து சடலத்தை மீட்டனா். திருக்கோயில் காவல் உதவியாளா் கனகராஜன் விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...