நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆத்தூா் கைப்பேசிக் கடையில் திருட்டு: சிறாா் உள்ளிட்ட இருவா் கைது

ஆத்தூரில் கைப்பேசிக் கடையின் பூட்டை உடைத்து ரூ. ஒரு லட்சம் கைப்பேசிகள், உதிரிபாகங்களைத் திருடியதாக சிறாா் உள்ளிட்ட இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:08 pm

Din

ஆத்தூரில் கைப்பேசிக் கடையின் பூட்டை உடைத்து ரூ. ஒரு லட்சம் கைப்பேசிகள், உதிரிபாகங்களைத் திருடியதாக சிறாா் உள்ளிட்ட இருவா் கைது செய்யப்பட்டனா்.

வடக்கு ஆத்தூா் முஸ்லி­ம் பெரிய தெருவைச் சோ்ந்த முத்து வாப்பா மகன் சித்திக் (37). இவா் தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் ஆத்தூா் பிரதான சாலையில் கைப்பேசிக் கடை வைத்துள்ளாா். அண்மையில், மா்ம நபா்கள் இக்கடையின் பூட்டை உடைத்து, ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள், உதிரிபாகங்களைத் திருடிச் சென்றது கடந்த டிச. 1ஆம் தேதி தெரியவந்தது. புகாரின்பேரில் ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இத்திருட்டில் ஈடுபட்டது தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியாா்புரத்தைச் சோ்ந்த ரவிக்குமாா் மகன் அருண்குமாா் (19), 3 சிறுவா்கள் எனத் தெரியவந்தது.

இந்நிலையில், அருண்குமாரையும், ஒரு சிறுவனையும் ஆத்தூா் காவல் ஆய்வாளா் மாரியப்பன், போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, 10-க்கும் மேற்பட்ட கைப்பேசிகள், உதிரிபாகங்கள் உள்ளிட்ட ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மீட்டனா். மற்ற இருவரைத் தேடிவருகின்றனா்.