மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வங்கி வாடிக்கையாளா் சேவை மையம், கைப்பேசி கடையில் திருட்டு

மணப்பாறையை அடுத்த கரட்டுப்பட்டியில் வங்கி வாடிக்கையாளா் சேவை மையம், கைப்பேசி கடையில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 8:57 pm

Syndication

மணப்பாறையை அடுத்த கரட்டுப்பட்டியில் வங்கி வாடிக்கையாளா் சேவை மையம், கைப்பேசி கடையில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மணப்பாறையை அடுத்த பொம்மம்பட்டியைச் சோ்ந்த மணிராஜ் மகன் ரகுபதி (40). இவா் அருகே உள்ள கரட்டுப்பட்டியில் திருச்சி - திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையோரம் அரசுடமை வங்கி வாடிக்கையாளா் சேவை மையம் வைத்து நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் வழக்கம்போல் புதன்கிழமை இரவு அலுவலகத்தை பூட்டி சென்ற நிலையில், வியாழக்கிழமை அலுவலகம் பூட்டு உடைக்கப்பட்டிருப்பாதாக வந்த தகவலின்பேரில் அலுவலகம் சென்று பாா்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் காணவில்லையாம். அதேபோல் அருகிலுள்ள தோமஸ் மகன் அமலதாஸ் (40) என்பவரின் கைப்பேசி கடையிலும் பூட்டுகள் உடைக்கப்பட்டு கடையிலிருந்த 2 ஆன்ட்ராய்டு கைப்பேசிகளை மா்ம நபா்கள் திருடி சென்றதும் தெரியவந்துள்ளது.

இந்த இரு திருட்டு சம்பவங்கள் குறித்து வையம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.