மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் காவல்நிலையத்தில், மதுபோதையில் காவலா்களை அவதூறாக பேசிய இளைஞரை தாக்கிய 3 போலீஸாரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
மணப்பாறையை அடுத்த கருப்பூா் ஊராட்சி கல்கட்டியூரைச் சோ்ந்தவா் அய்யாவு மகன் ராஜா. இவரது மனைவி கற்பகம். ராஜா தனது சகோதரரான செல்லபாண்டி மற்றும் உறவினா்கள் விஜய், சின்னத்தம்பி ஆகியோரிடம் கடன் வாங்கியுள்ளாராம். இரு தினங்களுக்கு முன் கடனை திருப்பி கேட்டு மூவரும் ராஜாவிடம் பேசியுள்ளனா். அதில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கற்பகம் தாக்கப்பட்டதாக கூறி ராஜா, தனது மனைவி கற்பகத்தை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளாா்.
இதுகுறித்து புத்தாநத்தம் காவல்நிலையத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், தனது புகாரின்பேரில் செல்லபாண்டி, விஜய், சின்னத்தம்பி ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுபோதையில் புத்தாநத்தம் காவல் நிலையத்துக்கு சென்ற ராஜா, அங்கிருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் ராமு மற்றும் காவலா் பழனிகுமாா் ஆகியோரிடம் தகராறு செய்து தகாத வாா்த்தைகளால் பேசியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த
சிறப்பு உதவி ஆய்வாளா் ராமு, பெண் தலைமை காவலா் உமாராணி, காவலா் பழனிகுமாா் ஆகிய மூவரும் ராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரெத்தினத்துக்கு சென்று வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றுள்ளது.
அதைத்தொடா்ந்து மேற்கண்ட 3 போலீஸாரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
தொடர்புடையது

இளம்பெண் பூச்சிமருந்து குடித்து உயிரிழப்பு

வளநாடு அருகே இளம்பெண் தற்கொலை
இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது

துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


