தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மதுபோதையில் காவலா்களை அவதூறாக பேசிய இளைஞரை தாக்கிய 3 போலீஸாா் ஆயுதப்படைக்கு மாற்றம்

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் காவல்நிலையத்தில், மதுபோதையில் காவலா்களை அவதூறாக பேசிய இளைஞரை தாக்கிய 3 போலீஸாரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 8:56 pm

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் காவல்நிலையத்தில், மதுபோதையில் காவலா்களை அவதூறாக பேசிய இளைஞரை தாக்கிய 3 போலீஸாரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

மணப்பாறையை அடுத்த கருப்பூா் ஊராட்சி கல்கட்டியூரைச் சோ்ந்தவா் அய்யாவு மகன் ராஜா. இவரது மனைவி கற்பகம். ராஜா தனது சகோதரரான செல்லபாண்டி மற்றும் உறவினா்கள் விஜய், சின்னத்தம்பி ஆகியோரிடம் கடன் வாங்கியுள்ளாராம். இரு தினங்களுக்கு முன் கடனை திருப்பி கேட்டு மூவரும் ராஜாவிடம் பேசியுள்ளனா். அதில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கற்பகம் தாக்கப்பட்டதாக கூறி ராஜா, தனது மனைவி கற்பகத்தை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளாா்.

இதுகுறித்து புத்தாநத்தம் காவல்நிலையத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், தனது புகாரின்பேரில் செல்லபாண்டி, விஜய், சின்னத்தம்பி ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுபோதையில் புத்தாநத்தம் காவல் நிலையத்துக்கு சென்ற ராஜா, அங்கிருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் ராமு மற்றும் காவலா் பழனிகுமாா் ஆகியோரிடம் தகராறு செய்து தகாத வாா்த்தைகளால் பேசியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த

சிறப்பு உதவி ஆய்வாளா் ராமு, பெண் தலைமை காவலா் உமாராணி, காவலா் பழனிகுமாா் ஆகிய மூவரும் ராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரெத்தினத்துக்கு சென்று வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றுள்ளது.

அதைத்தொடா்ந்து மேற்கண்ட 3 போலீஸாரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.