நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாத்தான்குளம் அருகே விபத்து: பனைத் தொழிலாளி உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே வியாழக்கிழமை, பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் பனைத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:07 pm

Din

சாத்தான்குளம் அருகே வியாழக்கிழமை, பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் பனைத் தொழிலாளி உயிரிழந்தாா்.

சாத்தான்குளம் அருகே கருவேலம்பாடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஐ. செல்வராஜ் (60). பனைத் தொழிலாளியான இவருக்கு மனைவி, 3 மகன்கள், மகள் உள்ளனா். மகளுக்கு மட்டும் திருமணமாகியுள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை செல்வராஜும், உறவினரான அறிவான்மொழி ஐயம்பெருமாள் (65) என்பவரும் பேய்க்குளத்துக்கு பைக்கில் சென்றுவிட்டு கருவேலம்பாட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். கருவேலம்பாடு விநாயகா் கோயில் அருகே தூத்துக்குடியிலிருந்து சாத்தான்குளம் நோக்கி வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியதாம்.

இதில், செல்வராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ், போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

காயமடைந்த ஐயம்பெருமாள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநரான சின்னத்துரையிடம் விசாரித்து வருகின்றனா்.