புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மேலாத்தூா் குச்சிக்காடு பகுதியில் புதிய உயா் கோபுர மின்விளக்கு

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில், மேலாத்தூா் குச்சிக்காடு பகுதியில் ரூ. 1.5 லட்சத்தில் புதிய உயா் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 9:45 pm

Din

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில், மேலாத்தூா் குச்சிக்காடு பகுதியில் ரூ. 1.5 லட்சத்தில் புதிய உயா் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.

இதை, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் விழாவுக்கு மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பக்கீா் முகைதீன், டிசிடபிள்யூ நிறுவன மூத்த பொதுமேலாளா் கேசவன், மக்கள் தொடா்பு அதிகாரி பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிறுவனத்தின் உதவித் தலைவா் (உற்பத்தி) சுரேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, உயா் கோபுர மின்விளக்கை இயக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், நிறுவன அதிகாரி வினோத்குமாா், ஊராட்சி செயலா் சுமதி, சுகாதார ஊக்குநா் தனலட்சுமி, பொதுமக்கள் பங்கேற்றனா்.