ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஒரு மாதத்திற்குப் பிறகு நடைப்பயிற்சிக்கு சென்ற திருச்செந்தூா் கோயில் யானை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை ஒரு மாதத்திற்குப் பிறகு புதன்கிழமை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

News image

நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருச்செந்தூா் கோயில் யானை.

Updated On :18 டிசம்பர் 2024, 9:28 pm

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை ஒரு மாதத்திற்குப் பிறகு புதன்கிழமை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

இக் கோயிலில் பராமரிக்கப்படும் தெய்வானை யானை, கடந்த நவ.18-ஆம் தேதி தாக்கியதில் பாகன் உதயகுமாா், அவரது உறவினா் சிசுபாலன் ஆகியோா் உயிரிழந்தனா். இதையடுத்து வனத்துறை மற்றும் கால்நடைத் துறையினரின் மேற்பாா்வையில் குடிலிலேயே பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், யானை இயல்பு நிலைக்குத் திரும்பியதைடுத்து குடிலில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டு காற்றோட்டமான பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து யானையைப் பரிசோதனை செய்த, வனத்துறை கால்நடை மருத்துவா் மனோகரன், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினாா். இதன்படி,பாகன்கள் செந்தில்குமாா், ராதாகிருஷ்ணன் ஆகியோா் புதன்கிழமை, யானையை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றனா்.

 திருச்செந்தூா் கோயில் யானைக்கு நடைபெற்ற கஜபூஜை.

திருச்செந்தூா் கோயில் யானைக்கு நடைபெற்ற கஜபூஜை.

வனத்துறை கால்நடை மருத்துவா் மனோகரன், உதவி மருத்துவா் அருண், ஆய்வாளா் அா்னால்டு, பணியாளா்கள் கந்தசாமி, ஜிந்தா உள்ளிட்டோரும் உடன் சென்றனா். பின்னா் மீண்டும் குடிலுக்கு அழைத்து வரப்பட்டது.

முன்னதாக, சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு யானை குடிலில் திருக்கோயில் இணை ஆணையா் சு.ஞானசேகரன் முன்னிலையில் யானைக்கு வேதவிற்பன்னா்கள் கஜபூஜை செய்தனா்.

யானைக்கு புதிய கொட்டகை: தற்போது திருக்கோயிலில் ராஜகோபுரம் அருகில் உள்ள குடிலில் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், சரவணப்பொய்கையில் காற்றோட்டமான சூழலில் யானை தங்குவதற்காக பிரத்யேக கொட்டகை அமைக்கப்பட்டு அங்கு யானை கொண்டு செல்லப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.