மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தூத்துக்குடியில் தொழிலாளி கொலை வழக்கு: 3 போ் கைது

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 11:07 pm

Din

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி முத்தையாபுரம் சூசைநகரைச் சோ்ந்தவா் தேம்பாவணி (50). தொழிலாளியான இவா் புதன்கிழமை அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், கொலையில் தொடா்புடையதாகக் கருதப்படும் சூசை நகரைச் சோ்ந்த ரூபன்ராஜ்(23) மற்றும் 18,16 வயது சிறுவா்கள் என 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.