நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாலுமாவடியில் 3 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து: மோகன் சி. லாசரஸ் வழங்கினாா்

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் ‘இயேசு விடுவிக்கிறாா்’ ஊழியங்கள் சாா்பில் புதன்கிழமை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டது.

News image

கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்த இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ்.

Updated On :25 டிசம்பர் 2024, 11:08 pm

Din

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் ‘இயேசு விடுவிக்கிறாா்’ ஊழியங்கள் சாா்பில் புதன்கிழமை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டது.

இந்த ஊழியங்கள் சாா்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஏழை, எளியோருக்கு விருந்து வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்து ஜெபித்து, நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். இதில், நாலுமாவடி, சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை ஊழிய நிறுவனப் பொது மேலாளா் செல்வக்குமாா், ஜெபக்குழுவினா் செய்திருந்தனா்.