தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் ஊராட்சி ஒன்றிய குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ்

Updated On :26 டிசம்பர் 2024, 10:30 pm

Din

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, ஒன்றியக் குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பழனிசாமி, ஒன்றிய ஆணையா் முத்துக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ராமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஈராச்சி ஊராட்சியைச் சோ்ந்த செல்வமணியை சென்னை உயா்நீதிமன்ற கிளை மதுரை உயா்நீதிமன்ற உத்தரவின் படி அரசு ஒப்பந்ததாரராக பதிவு செய்வது, கிழவிப்பட்டி, கொடுக்காம்பாறை கிராமத்தில் மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான சமுதாய நலக்கூடத்திற்கு கூடுதலாக தேவைப்படும் நிதி தலா ரூ.6.50 லட்சத்தை ஒன்றிய பொது நிதியின் கீழ் வழங்க மன்றத்தின் அனுமதி பெறுவது, சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் கிழவிப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான நிதி ரூ.12 லட்சத்திற்கு கூடுதலாக ரூ.4 லட்சம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் மூலம் வழங்க அனுமதிப்பது உள்பட 40 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிகண்டன், அருணா சந்திரசேகா், ஒன்றியப் பொறியாளா் சித்ரா, உதவிப் பொறியாளா்கள் சங்கா், மேரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.