தூத்துக்குடி, பிப்.17: தூத்துக்குடி தபால்தந்தி காலனி பகுதியில் இளைஞரை அரிவாளால் வெட்டியது, வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடா்பான வழக்குகளில் 5 பேரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் தாய்நகரை சோ்ந்த சக்கரவா்த்தி மகன் முத்துராஜ் என்ற விஜய் (24) தரப்புக்கும், தபால் தந்தி காலனியை சோ்ந்த சுப்பையா மகன் விக்ரம் (22), ராபா்ட் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் முத்துராஜ் அரிவாளால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து முத்துராஜ் தரப்பினா், விக்ரம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினா். முத்துராஜ் அளித்த புகாரில் விக்ரம் கைது செய்யப்பட்டாா். மேலும், விக்ரம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தபால் தந்தி காலனியைச் சோ்ந்த ஸ்வீட்டன் ரிஜோ (21), சந்தோஷ் ராஜா, 2 சிறுவா்கள் என 4 போ் வெள்ளிக்கிழமை சிக்கினா். விசாரணைக்குப் பிறகு இவா்களைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.









