முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

கோவில்பட்டி கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கு

கோவில்பட்டி கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கு

Updated On :17 பிப்ரவரி 2024, 10:57 pm IST

கோவில்பட்டி, பிப். 17: கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சுயநிதி பாடப் பிரிவுகளின் புள்ளியல் துறை, மின்னணுவியல் துறை, ஆரோக்கியக் கழகம் ஆகியவை சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் (பொறுப்பு) சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். கணினி அறிவியல் துறைப் பேராசிரியா் ஜெயபாரதி முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி நெல்லை கேன்சா் கோ் சென்டா் மருத்துவா் அபிராமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புற்றுநோய்கள், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள், உணவு முறைகள், பழக்கவழக்கங்கள் குறித்துப் பேசினாா். மாா்பக, வாய்ப் புற்றுநோய்களைத் தாமே கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்து செவிலியா் தங்கம்மாள் எடுத்துரைத்தாா். மாணவிகளின் கேள்விகள், சந்தேகங்களுக்கு மருத்துவக் குழுவினா் பதிலளித்தனா். கருத்தரங்கில் இளநிலை, முதுகலை மாணவிகள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை புள்ளியியல் துறைத் தலைவா் சாரதாதேவி, மின்னணுவியல் துறைத் தலைவா் சங்கா்கணேஷ், ஆரோக்கியக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயபிரியா, பேராசிரியா்கள் செய்திருந்தனா்.