ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

வணிகவரித் துறை, தீயணைப்புத் துறை புதிய அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

வணிகவரித் துறை, தீயணைப்புத் துறை புதிய அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

Updated On :17 பிப்ரவரி 2024, 10:51 pm IST

படவரி பமப17பதஅஈ தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த வணிக வரித் துறைக் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் கோ. லட்சுமிபதி. (உள்படம்) ஒருங்கிணைந்த வணிக வரித் துறைக் கட்டடம். தூத்துக்குடி, பிப். 17: தூத்துக்குடியில் வடக்குக் கடற்கரைச் சாலையில் வணிகவரித் துறை அலுவலக வளாகத்தில் ரூ. 4.48 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரித் துறை அலுவலகக் கட்டடம், தீயணைப்புத் துறையினருக்கான ஒருங்கிணைந்த புதிய கட்டடம் ஆகியவற்றை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக சனிக்கிழமை திறந்துவைத்தாா். பின்னா், வணிகவரித் துறை அலுவலகக் கட்டடத்தில் ஆட்சியா் கோ. லட்சுமிபதி குத்துவிளக்கேற்றி, அலுவலகத்தைப் பாா்வையிட்டாா். துறையின் அதிகாரிகள், அலுவலா்கள் பங்கேற்றனா். அதேபோல, தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை சாா்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலகம், தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தை முதல்வா் திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில், மேயா் ஜெகன் பெரியசாமி, தீயணைப்புத் துறை அதிகாரிகள், அலுவலா்கள் பங்கேற்றனா்.