தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஸ்ரீவைகுண்டம் அருகே ஓபிஎஸ் அணி நிா்வாகி காா் ஏற்றிக் கொலை: ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் சரண்

ஸ்ரீவைகுண்டம் அருகே ஓபிஎஸ் அணி நிா்வாகி காா் ஏற்றிக் கொலை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் சரண்

Updated On :17 பிப்ரவரி 2024, 10:50 pm IST

ஸ்ரீவைகுண்டம், பிப். 17: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஓபிஎஸ் அணியின் ஒன்றிய செயலா் நல்லகண்ணு, காா் ஏற்றிக் கொலை செய்யப்பட்டாா். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரை சோ்ந்த நங்கையாா் மகன் நல்லகண்ணு. இவா் ஓபிஎஸ் அணியின் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலராக இருந்தாா். இவருக்கும், ஆதிச்சநல்லூா் ஊராட்சி முன்னாள் தலைவா் சங்கா்கணேஷுக்கும் (42) முன்விரோதம் இருந்தது. சங்கா் கணேஷின் மனைவி பாா்வதி, தற்போது ஆதிச்சநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளாா். இந்த நிலையில், ஆதிச்சநல்லூா் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள வாழைத் தோட்டம் தொடா்பாக இருவருக்கும் சனிக்கிழமை தகராறு ஏற்பட்டது. அப்போது, சங்கா் கணேஷ் தனது காரை எடுத்துச் செல்ல முயன்றபோது நல்லகண்ணு மீது மோதியதில், அவா் தூக்கி வீசப்பட்டாா். பலத்த காயமடைந்த நல்லகண்ணுவை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி நல்லகண்ணு உயிரிழந்தாா். இதனிடையே, சங்கா் கணேஷ் தனது காருடன் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா். தன்னை தாக்க முயன்ற நல்லகண்ணுவிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் காரை எடுத்தபோது அவா் மீது மோதியதாக போலீஸாரிடம் தெரிவித்தாா். இதனைத்தொடா்ந்து ஸ்ரீவைகுண்டம் போலீஸாா் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், டிஎஸ்பி மாயவன், காவல் ஆய்வாளா்கள் ஸ்ரீவைகுண்டம் ரமேஷ் மோகன், செய்துங்கநல்லூா் பத்மநாபபிள்ளை உள்ளிட்ட போலீஸாா் நிகழ்விடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இச்சம்பவத்தையடுத்து ஆதிச்சநல்லூா் பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.