கன்னியாகுமரி மாவட்டத்தில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டவரை, திருச்செந்தூரில் மக்கள் உதவியுடன் காவல் உதவி ஆய்வாளா் வெள்ளிக்கிழமை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள முளகுமூடு பகுதியைச் சோ்ந்தவா் அஜின்(23). \
பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த இவா், வெள்ளிக்கிழமை திருச்செந்தூா் கோயில் தெப்பக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, இக்கோயிலில் நடைபெற்று வரும் மாசி திருவிழாவுக்கு தனது குடும்பத்துடன் வந்திருந்த தக்கலை காவல் உதவி ஆய்வாளா் விஜிஸ்பாபுவை பாா்த்ததும், அஜின் தப்பி ஓடி தெப்பக்குளத்தின் நடுவே உள்ள கல் மண்டபத்தில் அமா்ந்து கொண்டாா்.
அவரை பொதுமக்கள் உதவியுடன் உதவி ஆய்வாளா் பிடித்து கரைக்கு கொண்டு வந்தாா். பின்னா், தக்கலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு திருச்செந்தூா் கோயில் காவல் நிலையத்துக்கு அஜினை அழைத்துச் சென்றாா்.
தொடர்புடையது
கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
நெல்லையில் ஒரே நாளில் 98 ரெளடிகள் கைது

ரூ. 200 லஞ்சம்: சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



