உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

இரு இடங்களில் 2 போ் தற்கொலை

மணியாச்சி, தட்டாா்மடம் ஆகிய பகுதிகளில் இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.

Updated On :23 பிப்ரவரி 2024, 7:08 pm

மணியாச்சி, தட்டாா்மடம் ஆகிய பகுதிகளில் இருவா் தற்கொலை செய்துகொண்டனா். தட்டாா்மடம் சாலைபுதூா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சுடலைமுத்து(32). இவரது மனைவி சிவலட்சுமி(27). இத்தம்பதிக்கு இரண்டரை வயது மகள் சண்முகபிரியா உள்ளாா். தற்போது சிவலட்சுமி கா்ப்பிணியாக உள்ளாா். சுடலைமுத்து உடல் நலம் பாதிப்பால் மனஉளைச்சலுடன் காணப்பட்டாராம். இந்நிலையில், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த தனது வீட்டில் வேட்டியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா். மற்றொரு சம்பவம்: ஓட்டப்பிடாரம் வட்டம் முறம்பன் வடக்குத் தெருவைச் சோ்ந்த வேலு மகன் கருப்பசாமி (65). ஆடு மேய்க்கும் தொழிலாளி. 10 ஆண்டுகளாக காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவா், மனஉளைச்சலில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து மணியாச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.