மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

கோவில்பட்டி, கயத்தாறில் வருவாய்த் துறையினா் போராட்டம்

கோவில்பட்டி, கயத்தாறில் வருவாய்த் துறையினா் போராட்டம்

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 11:30 pm

23ஓயகபஅக கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா். கோவில்பட்டி, பிப். 23: தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி, கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இளநிலை வருவாய் ஆய்வாளா், முதுநிலை வருவாய் ஆய்வாளா் பணியிடங்களுக்கான பெயா் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையை வெளியிட வேண்டும், துணை வட்டாட்சியா் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களின் பணித்தன்மை கருதி அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும், இளநிலை உதவியாளா், தட்டச்சா் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிா்ணயம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்ய மனிதவள மேலாண்மைத் துறை மூலம் உரிய தெளிவுரை வழங்க வேண்டும், அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியா் பணியிடத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இப்போராட்டத்தால் வருவாய்த் துறை அலுவலகங்கள் வெறிச்சோடின; அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.