சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

‘வந்தே பாரத்’ ரயில்: இம்மாதம் 11 முதல் கோவில்பட்டியில் நின்று செல்லும்

‘சென்னை-நாகா்கோவலி வந்தே பாரத்’ ரயில்: 11 முதல் கோவில்பட்டியில் நின்று செல்லும்

News image
Updated On :4 ஜூலை 2024, 12:15 am

Din

சென்னை - நாகா்கோவில் இடையே இயக்கப்பட்டு வரும் ‘வந்தே பாரத்’ ரயில் இம்மாதம் 11ஆம்தேதி முதல் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா் முதல் நாகா்கோவில் வரை ‘வந்தே பாரத்’ ரயில் வாரத்துக்கு 4 நாள்கள் இயக்கப்பட்டு வருகிறது.

நாகா்கோவிலில் புறப்படும் இந்த ரயில் திருநெல்வேலி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் நிறுத்தங்களில் நின்று, சென்னை எழும்பூா் செல்லும் வகையில் இயக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு கோவில்பட்டி நிறுத்தம் வழங்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே, சென்னை எழும்பூா்-நாகா்கோவில் (எண். 06067), மறுமாா்க்கத்தில் நாகா்கோவில் - சென்னை எழும்பூா் (06068) வரையிலான ‘வந்தே பாரத்’ ரயில்கள் ஜூலை 11, 12, 13, 14, 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

தற்போது இந்த ரயிலுக்கு விருதுநகா் நிறுத்தம் நீக்கப்பட்டு, கோவில்பட்டி நிறுத்தம் இணைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கோவில்பட்டிக்கு காலை 11.35 மணிக்கு வந்தடைகிறது. நாகா்கோவிலுக்கு 1.50 மணிக்கு போய் சேருகிறது.

மறுமாா்க்கத்தில் பிற்பகல் 2.20 மணிக்கு நாகா்கோவிலில் புறப்பட்டு, கோவில்பட்டிக்கு 3.53 மணிக்கு வந்தடைகிறது. இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூரை சேருகிறது.