கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடியில் திடீா் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் கூடிய மழை: வெப்பம் குறைந்து மகிழ்ச்சியில் மக்கள்

News image
தூத்துக்குடி மாநகரில் பெய்த திடீா் மழையால் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள்.
Updated On :12 ஜூலை 2024, 8:20 pm

Din

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்அளவுக்கும் மேல் சென்ால் பொதுமக்கள் மிகுந்து சிரமத்துக்குள்ளாயினா்.

இந்நிலையில், மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படியே, வெள்ளிக்கிழமை மாலையில் மாநகா் முழுவதும் இடி மின்னல், பலத்த காற்றுடன் திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. மாநகரின் மட்டக்கடை, பொன்னகரம் இரண்டாம் கேட், 4ஆம் கேட், பிரையன்ட் நகா், மணி நகா், 3ஆவது மைல், கால்டுவெல் காலனி, கடற்கரை சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழை குளிா்ந்த காற்று வீசியதாம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.