25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி

எஸ். எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சிலம்பம் போட்டி

Published On :14 ஜூலை 2024, 3:54 am IST

கோவில்பட்டி, ஜூலை 13: தூத்துக்குடி மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் சிலம்பம் சங்கம், தமிழ் கல்சுரல் சபரி ஜெயம் ஜூனியா் கிளப் இணைந்து நடத்திய இருபாலருக்கான இப் போட்டியில், 180 போ் கலந்து கொண்டனா்.

மினி சப் ஜூனியா், சப் ஜூனியா், ஜூனியா், சீனியா் என்ற நான்கு பிரிவுகளில்

இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவுகளிலும் குத்து வரிசை, நெடுங்கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல் கம்பு, ஒற்றை வாள் வீச்சு, ஒற்றைச் சுருள் வாள் வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, இரட்டை வாள் வீச்சு, இரட்டை சுருள் வீச்சு, ஆயுத கோடி, குழு ஆயுத வீச்சு, கம்பு சண்டை என 13 தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது.

ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவா்களுக்குப்

பரிசுகள் வழங்கப்பட்டன. முதலிடத்தைப் பிடித்தவா்கள் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா்.

போட்டிகளை எஸ். எஸ். துரைசாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) செல்வராஜ் தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு யோகா ஸ்போா்ட்ஸ் பிரிவைச் சோ்ந்த மாரியப்பன், தமிழ் கல்சுரல் அறக்கட்டளை செயலா் சூா்யா நாராயணன், சிலம்பப் பள்ளியைச் சோ்ந்த நல்லதம்பி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அமைச்சூா் சிலம்பம் சங்க மாவட்ட செயலா் சோலை நாராயணசாமி தலைமையில் உறுப்பினா்கள் கணபதி ஆசான், உமா சங்கரி, காயத்ரி, அனிதா பிரின்சி, விஷ்ணு வாசுதேவன், மதன் பிரசாத், வேல்ராஜ், சரவணப் பெருமாள் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.